Sunday, July 24, 2011

"நன்றி கடன்"

நடப்பு உலகில், பெரும்பாலான வீடுகளில், பிள்ளைகள் படிப்பு, வேலை போன்ற காரணங்களுக்காக பெற்றோரை பிரிந்து இருப்பது வழக்கம். ஆனால், காரணம் எதுவாக இருந்தாலும்,பெற்றோரின் வயோதிக நிலைமையில் அவர்களை பாதுகாக்கும், மகிழ்விக்கும் பெரிய பொறுப்பு ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் உண்டு என்பதை உணர்த்தவே இந்த பதிவு.

சிறிய கதை,



ஊருக்கு வெளியே, மலை அடிவாரத்தில், ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அருகில், ஒரு சிறிய குடும்பம் வசித்து வந்தது. அந்த வீட்டில் வசித்த சிறுவன் பெரும்பாலான நேரம் மரத்தின் அருகிலேயே விளையாடுவதும், கிளைகளில் அமர்வதும், காய் கனிகளை உண்பதும், அதன் நிழலில் ஓய்வெடுபதும், அவன் கழித்த பொழுதுகள் அதிகம்.

காலம் ஓடியது, சிறுவன் வளர்ந்துவிட்டான். இப்போதெல்லாம் மரத்தடிக்கு அவ்வளவாக வருவது இல்லை.இதனால் மரம் வருந்தியது. ஒரு நாள் வாடிய முகத்துடன் வந்தவனை "வா விளையாடலாம்" என்று ஆசையுடன் அழைத்தது மரம். அவன், எனக்கு இப்போது உன்னுடன் விளையாடும் வயதில்லை. நான் மேல் படிப்பு படிக்க வேண்டும். நல்ல உடைகளும், காலணிகளும் வாங்க வேண்டும். அவற்றுக்கு வசதி வேண்டும் என்றான் ஏக்கத்துடன்.

உடனே மரம், 'என்னால் இவற்றை எல்லாம் உனக்கு கொடுக்க முடியாது. ஆனால், நீ எனது காய் - கனி'களை பறித்துகொண்டு போய் விற்று, உன் தேவைகளை பூர்த்தி செய்துகொள் என்றது. மகிழ்ச்சியுடன் மரம் கொடுத்தவற்றை எல்லாம் எடுத்துகொண்டு ஓடினான். அதன் பிறகு வெகு நாட்கள் அவன் வரவேயில்லை. மரமோ மிகவும் வருந்தியது.

ஒரு நாள் மீண்டும் வந்தான். 'இப்போதும் உன்னுடன் விளையாட வரவில்லை. நான் தொழில் செய்து பெரும் செல்வம் சேர்க்க வேண்டும். அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று தன் கஷ்டத்தை பகிர்த்து கொண்டான். உடனே மரம், 'பறந்து விரிந்த எனது கிளைகளை வெட்டி எடுத்து போய். தொழில் தொடங்கு !' என்று சந்தோஷமாக தனது கிளைகளை வெட்டிக்கொள்ள அனுமதித்தது.'

அதன் பிறகு பல காலம் அவன் வரவேயில்லை.பிறகு ஒரு நாள் வந்தான். 'எனக்கு இப்போது ஒரு குடும்பம் இருக்கிறது. பல பொறுப்புகள் இருக்கின்றன, நாங்கள் வசிக்க ஒரு வீடு வேண்டும். உன்னால் உதவ முடியுமா? என்று கேட்டான்.'

'தாராளமாக என் அடி மரத்தை வெட்டி எடுத்துச்செல், வீடு வசதிகளுடன் சந்தோசமாக இரு' என்றது மரம். மீண்டும் பல காலம் வராமல் இருந்த அவன், வெகு காலம் கழித்துத் திரும்பி வந்தான். அவனை பார்த்த மரத்திற்கு பெரும் மகிழ்ச்சி. என்றாலும். 'காய்ந்து கொண்டு இருக்கும் எனது வேர்களை தவிர, இப்போது உனக்கு கொடுக்க வேறு எதுவும் இல்லையே என்று வருந்தியது மரம்.

உடனே, 'எனக்கு இப்போது எதுவும் தேவை இல்லை.நிம்மதி கிடைத்தால் போதும்' என்றான் அவன்.

'நிம்மதி பெற இதைவிட சிறந்த இடம் இல்லை. எனது வேர்களில் தலை வைத்து படுத்து ஆறுதல் அடைவாயாக!' என்றது மரம் கண்ணீருடன்.




இந்த கதையில் வரும் மரத்தை போன்றவர்கள் நம் பெற்றோர். தங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் நமக்காக மனமுவந்து அளிப்பவர்கள். ஆனால் நம்மில் பலர், 'தனது தேவைக்காக மட்டும் மரத்தை உபயோகப்படுத்திகொண்ட' அந்தச் சிறுவனை போன்றவர்கள்.

பிள்ளைகளின்,மீது பாசத்தைப் பொழிவது உயிரினங்களின் இயற்கை நியதி. 'நான் உனக்கு இப்போது இதை கொடுக்கிறேன், பிறகு, நீ அதை எனக்குத் திருப்பி கொடு' என்பது வியாபாரம்.
'என்னிடம் இருப்பதை எல்லாம் நான் உனக்கு அளிக்கிறேன், அதன் மூலம் நீ பயன் அடைந்து வாழ்வதுடன், உன் சந்ததிக்கும் அதைப் பன்மடங்காக அளித்து அவர்களையும் வாழ்விப்பாயாக' என்பது வாழ்கை.

'நமக்காக, எல்லாவற்றையும் தியாகம் செய்து, நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு அன்புடன் அன்புடன் அன்புடன் சேவை செய்வது நமது தலையாய கடமை.'

'ஆனால், நாம் எவ்வளவுதான் செய்தாலும் அவை, அவர்கள் நம் மீது பொழிந்த அன்புக்கும் பாசத்துக்கும் ஒருபோதும் ஈடாகாது!'

உங்களது பரிவையும் பாசத்தையும் பெற்றோரிடமும் அவசியம் காட்டுங்கள். அதே உணர்வை குடும்பத்தினரிடமும், மற்றவர்களிடமும் காட்டப் பழகுங்கள்.

இதைவிட தாய் - தந்தையர்க்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் வேறு இல்லை.


மீண்டும் சந்திப்போம்

இப்படிக்கு
JP

Saturday, July 16, 2011

சொல்ல கூடாதவை

தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைய உலகில், சில நேரங்களில் சில மனிதர்கள் நடந்துகொள்ளும் விதம் சில விஷயங்களை அவர்களிடம் தவிர்க்கும் அவசியத்தை உணர்த்துகிறது.

அவற்றில் சில கீழே,

Police - நான் ஒன்னும் செய்யலீங்க.
Lawyer - எப்படியாவது வெளில கொண்டு வந்துடுங்க.
Doctor - எவ்ளோ செலவானாலும் பரவாயில்லீங்க.
Auto Driver - ரொம்ப அவசரம்.
Taxi Driver - எனக்கு போற வழி சரியா தெரியாது.
Manager - SLA'க்கு நான் பொறுப்பு.
Trainee - என்ன "doubt'a" இருந்தாலும் என்கிட்டே கேளு.
Broker - உங்களுக்கு எப்போ "free'o" அப்பவே மீட் பண்ணலாம்.
Teacher - கண்டிப்பா முடிசுடுவேன்.
Insurance Agent - நீங்களே பாலிசி சொல்லுங்க.


சும்மா விளையாட்டுக்கு பண்ண பதிவு இது.

நல்லதொரு பதிவோடு மீண்டும் சந்திப்போம்.


இப்படிக்கு
JP

Friday, October 8, 2010

சிந்தனைகள்

படித்ததில் பிடித்தவை ==>>

* ‘நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பது, இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது’ என்கிறார் புத்தர்.
* நாம் எதைச் சிந்திக்கிறோம் என்பதோடு, நாம் எதை ஆழமாக நம்பிச் சிந்திக்கிறோமோ அது நம்முடைய வளர்ச்சியில் அதிகமாகப் பிரதிபலிக்கிறது.
* மனம் எதை ஆழமாக நம்புகிறதோ அதைத்தான் மனிதன் சாதிக்கிறான்.
* தொழிலில் வெற்றியும், தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மனப்பான்மையினால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
* வெற்றியைச் சிந்தியுங்கள். வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள். வெற்றியை உருவாக்குவதற்குத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும்.

* ஒரு மனிதனுடைய மகிழ்ச்சியும், துயரமும் அவன் எந்த அளவுக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனாக இருக்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
* ஒருவனுடைய சூழ்நிலை எவ்வளவு அதிர்ஷ்டவசமானதாக இருப்பினும் கோபத்தை அவன் அடக்காவிட்டால் முழுமையான துயரத்திற்கு ஆளானவனாகவே அவன் இருப்பான்.
* ஒருவனுடைய அறிவின் முதிர்ச்சியை எந்த அளவுக்கு கோபம் தணிந்தவனாக இருக்கிறான் என்பதை வைத்துக் கணிக்கலாம்.
* கோபம் கொள்ளுதல் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற பிரதிக்கிரியைய் என்றும் அது வாலிபப் பருவத்திலும் அதற்குப் பின்னும் தொடர்கிறது.
* தொல்லைகள் நிரம்பிய இந்த உலகத்தில் அமைதியும் சமாதானமும் காண துணிச்சலும் நம்பிக்கையும்தான் தேவை.
* ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்.

* அடுத்தவர்களைப் பற்றி நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்துவிடுகிறோம்.
* பெறுவதிலோ, வைத்திருப்பதிலோ சந்தோஷம் இல்லை. தருவதில்தான் சந்தோஷம் இருக்கிறது.
* சந்தோஷம் என்பது நறுமணத் திரவியத்தைப் போல. உங்கள் மீது சில துளியாவது படாமல் உங்களால் அடுத்தவர் மேல் அதைத் தெளிக்க முடியாது.
* ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.
* ஒரு மனிதன் தனியாக இருக்கும்போது அவனிடம் என்ன இருக்கிறது, எதை யாராலும் அவனுக்குத் தர முடியாது அல்லது அவனிடமிருந்து எடுத்து செல்ல முடியாது என்பது நிச்சயம் அவனிடம் இருக்கும் செல்வங்களைவிட, உலகின் கண்களுக்கு அவன் எப்படித் தென்படுகிறான் என்பதைவிட அவசியமானதாகும்.
* சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன்.
* உள்ளிருக்கும் எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து வரும் சந்தோஷம்தான் உங்களுடனேயே நிலைத்து நிற்கிறது.

Wednesday, September 1, 2010

குடி பழக்கமும், அரசியல் சுயநலமும்

சமூக அளவில் இன்று மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் விஷயம் இதுவேதான். ஆனால், ஆளுகின்ற அரசாங்கமோ இதை ஒரு நல்ல வருமானம் ஈட்டும் தொழிலாகவே பார்க்கின்றது.

நல்ல அரசாங்கம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள இவர்கள் கையில் எடுக்கும் இலவச திட்டங்களை விட இன்று முக்கியமான தேவை மதுவிலக்கு மட்டுமே.

ஒரு தின கூலி பெறும் தொழிலாளியில் இருந்து ஒரு நிர்வாகத்தை நடத்தும் மேலாண்மை இயக்குனர்கள் வரை அனைவரும் பாரபட்சம் இல்லாமல் பின்பற்றும் ஒரு பழக்கமாகவே இது மாறி வருகிறது.

இதை குடிக்காதவர்கள், வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவர்களாகவும், கஞ்சர்களாகவும், உலகத்தின் நவீன மாற்றத்திற்கு ஈடு கொடுக்க தெரியாதவர்களாகவும் விமர்சிக்க படுகிறார்கள்.

ஒரு நாள் முழுவதும் வேலை செய்து சுமார் 100 முதல் 150 வரை பெறும் ஒருவர், அதில் 70% வரை மது குடிக்க செலவழிக்கும் நிலையில்,

அவரின் குடும்பம் =>

உணவிற்காக:, ஒரு ரூபாய் அரிசியையும்

உடைக்காக: பழைய துணிகளையும், இலவச வேட்டி/சேலை களையும்

உறைவிடத்திற்காக: குடிசைகளையும்

மருத்துவத்திற்காக: அரசு மருத்துவமனைகளையும்

கல்வி: அவரின் பிள்ளைகள், தங்களின் கல்வி/மேற்படிப்பு பற்றிய கனவுகளை விட்டு விட்டு, வேலைக்ககும் செல்வதை தவிர,

வேறு என்ன மாற்று இருக்க முடியும் ?

அந்த நபரின் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும், அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் அடுத்தவரின் உதவியையோ, அரசாங்கத்தின் இலவச திட்டங்களையோ முழுவதும் நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தபடுகிறார்கள்.

மேலும் அவர்கள் தங்களின் எதிர்கால கனவை துறந்து இன்ன பிற கூலி வேலைகளுக்கோ, சட்டத்திற்கு புறம்பான செயல்களிலோ ஈடுபட இதுவும் ஒரு காரணம் ஆகின்றது.

மேலே குறிப்பிட்ட எல்லாமுமே அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஒரு தனி மனிதனின் தவறான பழக்கம், ஒரு குடும்பத்தையே நடு வீதிக்கு வரவழைக்கிறது. ஆனால், இதில் கிடைக்கும் வருமானம் மட்டுமே அரசாங்கத்திற்கு முக்கியமாக தெரிகிறது.

ஒட்டுமொத்த கீழ்த்தட்டு மக்களும் அவர்களின் வாரிசுகளும் உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் அரசாங்கத்திடம் கையேந்தும் நிலைக்கு மறைமுகமாக உட்படுத்தபடுகிறார்கள்.

தங்கள் கட்சியை கீழ்த்தட்டு மக்களின் காவலர்களாக காட்டுவதற்கு இவர்கள் கையில் எடுக்கும் இலவச திட்டங்களும், இந்த மக்களின் பரிதாப நிலைக்கு பின்னால், இவர்களின் சுய நல அரசியல் இருப்பதை மறைத்து இவர்கள் நடந்து கொள்ளும் முறையை பார்க்கும பொழுது, "பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும்" செயல்தான் என் நினைவுக்கு வருகிறது.

இதன்மூலம், அரசியல்வாதிகள் பெறும் ஆதாயம் ஒட்டு எனும் மந்திரச்சாவி.



என்று தணியும் இந்த குடியின் மோகம்.

ஆண்டவா வழி காட்டு.

மீண்டும் சந்திப்போம்

இப்படிக்கு
JP

என்னவளே

உண்மை உரைத்தாய்
உணர்வோடு பழகினாய்
உடலோடு இணைந்தாய்
மூச்சாக நகர்கிறாய்
உயிரோடு கலந்தாய்
என்னுள் ஐக்கியம் ஆனாய்.


இப்படிக்கு,
உன்னிடம் என்னை இழந்த
நான்.

Friday, January 22, 2010

அருணாச்சல பிரதேசம் Vs காங்கிரஸ்


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்துக்கு சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது.

அருணாசல பிரதேசத்தில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு (
வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் & மண் அரிப்பைத் தடுக்கும் திட்டத்திற்கு ) ஆசிய வளர்ச்சி வங்கி அளிக்க இருந்த கடன் உதவியை சீனா தலையிட்டு தடுத்து நிறுத்தி உள்ளது.

கடந்த மாதம் , பிரதமர் மன்மோகன்சிங் அங்கு சென்றிருந்தபோது அருணாசல பிரதேசம் சூரியன் உதிக்கும் நமது நிலப்பரப்பு என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சீனவின் தூதர் சுன் யூக்சி, அருணாசல பிரதேசம் முழுவதும் சீனாவுக்கு சொந்தமான பகுதி என்று கூறியிருந்தார். அருணாசல பிரதேசம் முழுவதையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என அவர் கூறியிருந்தார்.

see india map in GoogleMap. கூகிள் டிரிபிள் கேம் விளையாடுகிறது.

http://ditu.google.cn/ - சீனாவின் ஒரு பகுதி அருணாசல் பிரதேசம்

http://maps.google.co.in/ - இந்தியாவின் ஒரு பகுதி அருணாசல பிரதேசம்.

http://maps.google.com/ - சர்ச்சைக்கு உட்பட்ட இடம் அருணாசல பிரதேசம்
(காஷ்மீர் போல இதையும் புள்ளிக்கோடுகளால் காட்டி உள்ளனர்.

புத்த மதத்தலைவர் தலாய்லாமா அருணாசல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து சின பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட கட்டுரையில் 'அருணாசல பிரதேசத்தில் தலாய்லாமாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது சீனாவை அதிருப்தி அடையச்செய்துள்ளது. போருக்கு அழைக்கும் நோக்கத்தோடு இந்தியா இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறதோ என்று சீனா சந்தேகமடைகிறது. 1962ஆம்ஆண்டு சீனாவுடன் இந்தியா போரிட்டு தோல்வியடைந்ததை பாடமாக இந்திய எடுத்துக்கொள்ள வேண்டும்."என்று கட்டுரை வெளியிட்டிருந்தது.

''அருணாசல பிரதேசத்தில் இருநாடுகளுக்கும் இடையில் பிரசனை நீடிக்கும் போது தலாய்லாமாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளித்தது கண்டிக்கத்தக்கது"என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜின் காங் தெரிவித்திருந்தார்.


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேயர் வரையறை செய்த `இந்தியா-சீனா எல்லை'யை சீனா ஏற்க மறுத்து வருகிறது.

இந்தியாவின் எல்லையோர பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததை தொடர்ந்து, கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே போர் நடந்தது. அதன் பிறகு, எல்லை பிரச்சினை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே 13 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும், எல்லை பிரச்சினைக்கு இதுவரை சுமூக தீர்வு காணப்படவில்லை.

அதே நேரத்தில், காஷ்மீர் மாநிலத்தில் 43 ஆயிரத்து 180 சதுர கி.மீ. பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டது. இது குறித்து இந்தியா பிரச்சினை எழுப்பினால், "இந்தியாதான் சீனாவுக்கு சொந்தமான 90 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை ஆக்கிரமித்து விட்டது'' என சீனா அடாவடியாக பதில் கூறி வருகிறது.
சீனா உரிமை கோரும் பெரும்பாலான பகுதிகள், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ளன. இது தவிர, சிக்கிம் உள்ளிட்ட சில எல்லையோர மாநிலங்களிலும் சீனா மூக்கை நுழைத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த 3-ந் தேதி அன்று பிரதமர் மன்மோகன்சிங் அருணாசல பிரதேசத்துக்கு சென்றார். அதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மன்மோகன்சிங் பெயரை குறிப்பிடாமல், இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மாஜாவுக்சு அறிக்கை வெளியிட்டார். வெளியுறவு இணைய தளத்தில் அந்த அறிக்கை நேற்று வெளியானது.

அதில், "இந்திய - சீன எல்லை, இன்னமும் அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை. எனவே, சீனாவின் தீவிரமான கவலையை பொருட்படுத்தாமல் பிரச்சினைக்குரிய பகுதிக்கு (அருணாசல பிரதேசம்) இந்திய தலைவர் (மன்மோகன்சிங்) பயணம் மேற்கொண்டதால் சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இந்தியா - சீனா உறவில் மேம்பாடு ஏற்பட வேண்டுமானால் சீனாவின் கவலையை இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டும் என்று சீனா கேட்டுக்கொள்கிறது'' என கூறப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது வெட்க கேடானது.

அண்மையில் நடந்த அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில் 70 சதவீத மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அருணாசல பிரதேசத்தை சீனா எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?''

ஆளும் காங்கிரஸ் கடந்த 60 வருட ஆட்சியில், வெளியுறவு கொள்கையில் உறுதியாக இல்லாமல் , மற்ற நாட்டினரின் இழுப்புக்கு எல்லாம் ஆடியுள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகிறது ?????



Sunday, December 27, 2009

இந்தியா அழைக்கிறது : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!


இந்திய தேசிய ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டர்!







"தாக்குண்டால் புழு கூட
தரை விட்டு தீ துள்ளும்
கழுகு தூக்கினும் குஞ்சுக்காக
துடித்து எழும் கோழி
சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது
முயல் கூட திருப்பித்தாக்கும்
சாக்கடை புழுக்கள்ல்ல நாங்கள்
சரித்திரத்தின் சக்கரங்கள்"

அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி


பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது!

இளம் வயதிலிருந்தே கல்வி ஆர்வம் மிக்க சிறந்த மாணவராகத் திகழ்ந்த சுபாஷ் சந்திர போஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் ஆன்மீக அழைப்புக்களால் ஈர்க்கப்பட்டார். சன்யாசத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார். `மக்கள் சேவையில் இறைவனை காண்' என்ற விவேகானந்தரின் அறிவுரையால் ஈர்க்கப்பட்டு அவ்வாறே பணியாற்றியும் வந்தார்.

ஸ்ரீ அரவிந்தர் எழுத்துக்கள் சுபாஷ் சந்திர போஸுக்கு தேசப் பற்றை ஊட்டியது மட்டுமின்றி, தேச சேவையிலும் நாட்டத்தை ஏற்படுத்தியது. பின்னாளில் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து தேச விடுதலை போராட்டத்தில் ஈடுபட, ஸ்ரீ அரவிந்தர், ஆர்யா எனும் தனது பத்திரிகையில் எழுதிவந்த கட்டுரைகளே காரணமாக அமைந்தது.

"உங்களில் சிலரை உன்னத மனிதர்களாக காண விரும்புகிறேன்; உங்களுக்காக அல்ல, இந்திய திருநாட்டை உன்னத நாடாக உயர்த்தும் உன்னத மனிதர்களாகவே காண விரும்புகிறேன். உங்களுடைய தாய்நாட்டின் சேவைக்காக உங்களை அர்ப்பணியுங்கள். அவளுடைய வளத்திற்காக செயலாற்றுங்கள், அவளுடைய இன்பத்திற்காக நீங்கள் துயரத்தை தாங்குங்கள்" என்ற ஸ்ரீ அரவிந்தரின் வார்த்தைகள் சுபாஷின் உள்ளத்தில் தேசத்திற்காக பணியாற்ற வேண்டும் என்ற தீயை வார்த்தது.

ஐ.சி.எஸ். முடித்து 1921 ஆம் ஆண்டு, தனது 23 வது வயதில் மீண்டும் இந்தியா வந்த சுபாஷ் சந்திர போஸ், ஐ.சி.எஸ். அதிகாரியாக பணியில் சேரவில்லை. ஆனால் தேச விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார்.


அடுத்த ஒன்பது ஆண்டுகள் சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய பணி இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் அவரை மாபெரும் தலைவராக உயர்த்தியது.

இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி 1938 ஆம் ஆண்டு அவர் ஐரோப்பாவில் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

41-வது வயதிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், 1939 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், மகாத்மா காந்தி நிறுத்திய பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்து, மீண்டும் தலைவரானார்.

பட்டாபி சீதாராமையாவின் தோல்வி தனது தோல்வி என்று காந்தி கூறினார். இது நேதாஜியை வருத்தத்தில் ஆழ்த்தியது.

மத்திய பிரதேச மாநிலம் திரிபூரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு அடுத்த ஆறு மாதங்களில் பிரிட்டிஷ் அரசு முழு விடுதலை அளித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற நேதாஜி முயன்றார். ஆனால் காந்தியவாதிளால் அத்தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது.

அஹிம்சை மீது போஸிற்கு நம்பிக்கை இருந்த போதும் , இது நம் குடும்பத்திற்குள் வரும்
பிரச்னைகளுக்கும், உள்நாட்டு பிரச்சனை களுக்கும் மட்டுமே பொருந்தும் என்றும் , எதிரிகளை , நம்மை அடிமை படுத்துபவர்களை நம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற கருத்து கொண்டவராக விளங்கினார்.

காந்திஜிக்கும், நேதாஜிக்கும் இடையே இவ்வாறு ஏற்பட்ட பல மோதல்களின் விளைவாக காங்கிரஸ் தலைவர் பதவியை கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் போது துறந்தார் நேதாஜி. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஃபார்வர்ட் பிளாக் (முற்போக்கு அணி) தொடங்கினார்.


பாரத திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைத் தனையால் பிணைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் .

இந்திய விடுதலை போராட்டத்தின் இறுதி கட்டத்தில், இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டிருந்த அன்றைய உலக சூழலை கருத்தில் கொண்டு, சர்வதேச சக்திகளின் துணையுடன் அன்னிய மண்ணில் களம் அமைத்து அவர் நடத்திய விடுதலை போர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கதிகலங்க அடித்தது.

அமைதியான, சாத்வக போராட்டங்களால் மட்டுமின்றி, ஆயுதம் தாங்கிய வீர வழியில் இந்தியாவிற்கு உள்ளேயும், இந்தியாவிற்கு வெளியேயும் இருந்து நடத்தப்பட்ட போராட்டங்களால் (போர்களால்) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிர்பந்தங்களால்தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்பதே வரலாறு நமக்கு காட்டிவரும் உண்மையாகும்.

இந்தியாவிற்கு இப்படியும் போராடத் தெரியும் என்பதை உலகத்திற்கு உணர்த்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இன்றைய சுயநல அரசியலில் இவரின் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்ல ஆட்சியாளர்கள் தவறி விட்டார்கள் என்பதே முற்றிலும் உண்மை .

உண்மையான வீரனை, தேச பக்தியே மூச்சாக கொண்ட மாமனிதர்களின் பெருமையை மறைக்க எவராலும் முடியாது .

உங்களின் நேரத்தில் ஒரு சில மணி துளிகளை ஒதுக்கி , இந்த மாமனிதரை பற்றிமுழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

note: all contents/pictures gathered from several websites.







பிறப்பு: ஜனவரி 23, 1897

மறைவு: ஆகஸ்ட் 18 1945






Saturday, December 26, 2009

படித்ததில் பிடித்தது



இறைவா மாற்றங்களை உருவாக்கும் வல்லமை தா.. மாற்றங்களை ஏற்று கொள்ளும் பக்குவத்தை தா.. இதற்கு இடைப்பட்ட வேறுபாடுகளை உணர்ந்து கொள்ளும் அறிவை தா!


Friday, December 25, 2009

இதோ இங்கே சில சிறந்த ப்ளாக் சேவை வழங்கும் இணைய தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .

Blogger

www.blogger.com

FREE


LiveJournal

www.livejournal.com

FREE


TypePad

www.typepad.com

FREE

30 days trial

BlogHarbor

www.blogharbor.com

FREE

30 days trial

SquaresSpace

www.squarespace.com

FREE


WordPress

www.wordpress.org

FREE


Movable Type

www.movabletype.org

PAID


XOOPS

www.xoops.org

FREE


b2evolution

www.b2evolution.net

FREE


Blogware

www.Blogware.com

FREE

30 days trial

Express engine

www.expressionengine.com

FREE

30 days trial

tumblr

www.tumblr.com

FREE


Blosxom

www.blosxom.com

FREE


Thursday, December 3, 2009

தொலைதொடர்பு சாதனங்களின் - வரலாறு

Note: Click Picture to View in Original Size

இதோ இங்கே , தொலைதொடர்பு சாதனங்களின் வளர்ச்சி அன்று முதல் இன்று வரை விரிவாக படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது .

Saturday, August 1, 2009

ஔவையார் மற்றும் பாரதி பாடல்கள்

வணக்கம்,

சில நாட்கள் முன்பு , மகா கவி சுப்ரமணிய பாரதியார் மற்றும் ஒளவையாரின் பாடல்களை படித்தேன் . அதில் சில பாடல்கள் என் ஆரம்ப பள்ளி நாட்களை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது .

தமிழ் வழி கல்வி பயின்றோரின் நினைவில் கண்டிப்பாக இந்த பாடல்கள் என்றென்றும் நிலைக்கும்.

நான் பெற்ற மகிழ்ச்சியை நீங்களும் பெற இதோ சில பாடல்கள் கீழே ,


ஒளவையாரின் பாடல்கள்

மகா கவி சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்


மீண்டும் சந்திப்போம்

நன்றி

இப்படிக்கு JP

Tuesday, July 28, 2009

ஆரம்ப விண்ணியல்

ஆரம்ப விண்ணியல் மென் புத்தகம் => இங்கே

மகாகவி பாரதியாரின் பகவத் கீதை

மகாகவி பாரதியாரின் பகவத் கீதை => இங்கே

மகேஷ் . S

( தோற்றம் 22Jun1978 - மறைவு 8Aug2004 )

என் முதல் பதிப்பு, மறைந்த என் இரண்டாம் அண்ணன் "மகேஷ்" பற்றியதாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .

வரும் "8 Aug 2009" அன்று எங்கள் சகோதரன் மறைந்து 5 ஆண்டுகள் நிறைவு அடைகிறது . கடந்த 5 ஆண்டுகளை நினைத்து பார்க்கும் பொழுது, அவனின் பிரிவை ஏற்றுகொள்ளவே முடியாத துக்கம் மனதை அழுத்துகிறது.

அன்று, அந்த துக்கத்தை ஜீரணிக்க முடியாமல் மனம் வெந்து கொண்டு இருக்கும் பொழுதே , மற்றவர்கள் மூலமாக பல கஷ்டங்கள், அவமானம், கிண்டல் , கேலி வந்ததையும் சகித்துக்கொண்டு மேலே வந்துள்ளோம் என்று நினைக்கும் பொழுது, இது முழுவதுமாக மகேஷின் ஆசீர்வாதமாகத்தான் எங்களுக்கு தோன்றுகிறது .

இந்த 5 வருடங்களில் நான் கற்று கொண்ட படிப்பினை அதிகம் என்றால் மிகையாகாது. வேலை , வருமானம் , படிப்பு போன்றவற்றில் எனக்கு ஏற்பட்ட முன்னேற்றம், இந்த சமூகத்தில் வீடு, குடும்ப நிலை, திருமணம் ஆகியவற்றிலும் என்னை சில படிகள் முன்னுக்கு செல்ல உதவியது. ஒன்று மட்டும் நிஜம் - எதுவும் யாருக்கும் சும்மா கிடைப்பதில்லை. முயற்சி உடையர் இகழ்ச்சி அடையார் என்பது தனிப்பட்ட முறையில் மிக சரி என்பதே என் கூற்று . இப்படி சொல்லுவதால் தோல்வியே இல்லை என்பது அர்த்தம் இல்லை . மீண்டும் மீண்டும் முயன்றால் வெற்றி நிச்சயம் என்பதே உண்மை .

இந்த வெற்றி முழுவதுமாக மகேஷின் ஆசிர்வாதம் மட்டுமே . அன்று, நான் துவண்டு விடாமல் என்னை மன ரீதியாக வலுப்படுத்தி , பக்குவ படுத்தி , எங்கள் குடும்பம், இந்த சமுகத்தில் உயர் நிலைக்கு முன்னேற்றி செல்ல விடாமுயற்சியுடன் என்னை இயங்க வைத்தவன் அவனே .

இங்கு நான் சொல்ல விரும்பும் விஷயமும் இதுவேதான் . நாம் எப்படி பட்ட கஷ்ட நிலையில் இருந்தாலும் , சுய நலமில்லாமல் , முழு நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் செயல் பட்டால் வெற்றி எட்டும் தூரம்தான் !!!!!!!!.





மீண்டும் சந்திப்போம்

நன்றி வணக்கம்

--இப்படிக்கு JP


Free Web Counter

Free Counter