Tuesday, July 28, 2009

ஆரம்ப விண்ணியல்

ஆரம்ப விண்ணியல் மென் புத்தகம் => இங்கே

மகாகவி பாரதியாரின் பகவத் கீதை

மகாகவி பாரதியாரின் பகவத் கீதை => இங்கே

மகேஷ் . S

( தோற்றம் 22Jun1978 - மறைவு 8Aug2004 )

என் முதல் பதிப்பு, மறைந்த என் இரண்டாம் அண்ணன் "மகேஷ்" பற்றியதாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .

வரும் "8 Aug 2009" அன்று எங்கள் சகோதரன் மறைந்து 5 ஆண்டுகள் நிறைவு அடைகிறது . கடந்த 5 ஆண்டுகளை நினைத்து பார்க்கும் பொழுது, அவனின் பிரிவை ஏற்றுகொள்ளவே முடியாத துக்கம் மனதை அழுத்துகிறது.

அன்று, அந்த துக்கத்தை ஜீரணிக்க முடியாமல் மனம் வெந்து கொண்டு இருக்கும் பொழுதே , மற்றவர்கள் மூலமாக பல கஷ்டங்கள், அவமானம், கிண்டல் , கேலி வந்ததையும் சகித்துக்கொண்டு மேலே வந்துள்ளோம் என்று நினைக்கும் பொழுது, இது முழுவதுமாக மகேஷின் ஆசீர்வாதமாகத்தான் எங்களுக்கு தோன்றுகிறது .

இந்த 5 வருடங்களில் நான் கற்று கொண்ட படிப்பினை அதிகம் என்றால் மிகையாகாது. வேலை , வருமானம் , படிப்பு போன்றவற்றில் எனக்கு ஏற்பட்ட முன்னேற்றம், இந்த சமூகத்தில் வீடு, குடும்ப நிலை, திருமணம் ஆகியவற்றிலும் என்னை சில படிகள் முன்னுக்கு செல்ல உதவியது. ஒன்று மட்டும் நிஜம் - எதுவும் யாருக்கும் சும்மா கிடைப்பதில்லை. முயற்சி உடையர் இகழ்ச்சி அடையார் என்பது தனிப்பட்ட முறையில் மிக சரி என்பதே என் கூற்று . இப்படி சொல்லுவதால் தோல்வியே இல்லை என்பது அர்த்தம் இல்லை . மீண்டும் மீண்டும் முயன்றால் வெற்றி நிச்சயம் என்பதே உண்மை .

இந்த வெற்றி முழுவதுமாக மகேஷின் ஆசிர்வாதம் மட்டுமே . அன்று, நான் துவண்டு விடாமல் என்னை மன ரீதியாக வலுப்படுத்தி , பக்குவ படுத்தி , எங்கள் குடும்பம், இந்த சமுகத்தில் உயர் நிலைக்கு முன்னேற்றி செல்ல விடாமுயற்சியுடன் என்னை இயங்க வைத்தவன் அவனே .

இங்கு நான் சொல்ல விரும்பும் விஷயமும் இதுவேதான் . நாம் எப்படி பட்ட கஷ்ட நிலையில் இருந்தாலும் , சுய நலமில்லாமல் , முழு நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் செயல் பட்டால் வெற்றி எட்டும் தூரம்தான் !!!!!!!!.





மீண்டும் சந்திப்போம்

நன்றி வணக்கம்

--இப்படிக்கு JP


Free Web Counter

Free Counter