Friday, October 8, 2010

சிந்தனைகள்

படித்ததில் பிடித்தவை ==>>

* ‘நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பது, இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது’ என்கிறார் புத்தர்.
* நாம் எதைச் சிந்திக்கிறோம் என்பதோடு, நாம் எதை ஆழமாக நம்பிச் சிந்திக்கிறோமோ அது நம்முடைய வளர்ச்சியில் அதிகமாகப் பிரதிபலிக்கிறது.
* மனம் எதை ஆழமாக நம்புகிறதோ அதைத்தான் மனிதன் சாதிக்கிறான்.
* தொழிலில் வெற்றியும், தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மனப்பான்மையினால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
* வெற்றியைச் சிந்தியுங்கள். வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள். வெற்றியை உருவாக்குவதற்குத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும்.

* ஒரு மனிதனுடைய மகிழ்ச்சியும், துயரமும் அவன் எந்த அளவுக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனாக இருக்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
* ஒருவனுடைய சூழ்நிலை எவ்வளவு அதிர்ஷ்டவசமானதாக இருப்பினும் கோபத்தை அவன் அடக்காவிட்டால் முழுமையான துயரத்திற்கு ஆளானவனாகவே அவன் இருப்பான்.
* ஒருவனுடைய அறிவின் முதிர்ச்சியை எந்த அளவுக்கு கோபம் தணிந்தவனாக இருக்கிறான் என்பதை வைத்துக் கணிக்கலாம்.
* கோபம் கொள்ளுதல் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற பிரதிக்கிரியைய் என்றும் அது வாலிபப் பருவத்திலும் அதற்குப் பின்னும் தொடர்கிறது.
* தொல்லைகள் நிரம்பிய இந்த உலகத்தில் அமைதியும் சமாதானமும் காண துணிச்சலும் நம்பிக்கையும்தான் தேவை.
* ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்.

* அடுத்தவர்களைப் பற்றி நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்துவிடுகிறோம்.
* பெறுவதிலோ, வைத்திருப்பதிலோ சந்தோஷம் இல்லை. தருவதில்தான் சந்தோஷம் இருக்கிறது.
* சந்தோஷம் என்பது நறுமணத் திரவியத்தைப் போல. உங்கள் மீது சில துளியாவது படாமல் உங்களால் அடுத்தவர் மேல் அதைத் தெளிக்க முடியாது.
* ஒரு மனிதனிடம் என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.
* ஒரு மனிதன் தனியாக இருக்கும்போது அவனிடம் என்ன இருக்கிறது, எதை யாராலும் அவனுக்குத் தர முடியாது அல்லது அவனிடமிருந்து எடுத்து செல்ல முடியாது என்பது நிச்சயம் அவனிடம் இருக்கும் செல்வங்களைவிட, உலகின் கண்களுக்கு அவன் எப்படித் தென்படுகிறான் என்பதைவிட அவசியமானதாகும்.
* சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன்.
* உள்ளிருக்கும் எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து வரும் சந்தோஷம்தான் உங்களுடனேயே நிலைத்து நிற்கிறது.

Wednesday, September 1, 2010

குடி பழக்கமும், அரசியல் சுயநலமும்

சமூக அளவில் இன்று மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் விஷயம் இதுவேதான். ஆனால், ஆளுகின்ற அரசாங்கமோ இதை ஒரு நல்ல வருமானம் ஈட்டும் தொழிலாகவே பார்க்கின்றது.

நல்ல அரசாங்கம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள இவர்கள் கையில் எடுக்கும் இலவச திட்டங்களை விட இன்று முக்கியமான தேவை மதுவிலக்கு மட்டுமே.

ஒரு தின கூலி பெறும் தொழிலாளியில் இருந்து ஒரு நிர்வாகத்தை நடத்தும் மேலாண்மை இயக்குனர்கள் வரை அனைவரும் பாரபட்சம் இல்லாமல் பின்பற்றும் ஒரு பழக்கமாகவே இது மாறி வருகிறது.

இதை குடிக்காதவர்கள், வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவர்களாகவும், கஞ்சர்களாகவும், உலகத்தின் நவீன மாற்றத்திற்கு ஈடு கொடுக்க தெரியாதவர்களாகவும் விமர்சிக்க படுகிறார்கள்.

ஒரு நாள் முழுவதும் வேலை செய்து சுமார் 100 முதல் 150 வரை பெறும் ஒருவர், அதில் 70% வரை மது குடிக்க செலவழிக்கும் நிலையில்,

அவரின் குடும்பம் =>

உணவிற்காக:, ஒரு ரூபாய் அரிசியையும்

உடைக்காக: பழைய துணிகளையும், இலவச வேட்டி/சேலை களையும்

உறைவிடத்திற்காக: குடிசைகளையும்

மருத்துவத்திற்காக: அரசு மருத்துவமனைகளையும்

கல்வி: அவரின் பிள்ளைகள், தங்களின் கல்வி/மேற்படிப்பு பற்றிய கனவுகளை விட்டு விட்டு, வேலைக்ககும் செல்வதை தவிர,

வேறு என்ன மாற்று இருக்க முடியும் ?

அந்த நபரின் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும், அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் அடுத்தவரின் உதவியையோ, அரசாங்கத்தின் இலவச திட்டங்களையோ முழுவதும் நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தபடுகிறார்கள்.

மேலும் அவர்கள் தங்களின் எதிர்கால கனவை துறந்து இன்ன பிற கூலி வேலைகளுக்கோ, சட்டத்திற்கு புறம்பான செயல்களிலோ ஈடுபட இதுவும் ஒரு காரணம் ஆகின்றது.

மேலே குறிப்பிட்ட எல்லாமுமே அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஒரு தனி மனிதனின் தவறான பழக்கம், ஒரு குடும்பத்தையே நடு வீதிக்கு வரவழைக்கிறது. ஆனால், இதில் கிடைக்கும் வருமானம் மட்டுமே அரசாங்கத்திற்கு முக்கியமாக தெரிகிறது.

ஒட்டுமொத்த கீழ்த்தட்டு மக்களும் அவர்களின் வாரிசுகளும் உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் அரசாங்கத்திடம் கையேந்தும் நிலைக்கு மறைமுகமாக உட்படுத்தபடுகிறார்கள்.

தங்கள் கட்சியை கீழ்த்தட்டு மக்களின் காவலர்களாக காட்டுவதற்கு இவர்கள் கையில் எடுக்கும் இலவச திட்டங்களும், இந்த மக்களின் பரிதாப நிலைக்கு பின்னால், இவர்களின் சுய நல அரசியல் இருப்பதை மறைத்து இவர்கள் நடந்து கொள்ளும் முறையை பார்க்கும பொழுது, "பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும்" செயல்தான் என் நினைவுக்கு வருகிறது.

இதன்மூலம், அரசியல்வாதிகள் பெறும் ஆதாயம் ஒட்டு எனும் மந்திரச்சாவி.



என்று தணியும் இந்த குடியின் மோகம்.

ஆண்டவா வழி காட்டு.

மீண்டும் சந்திப்போம்

இப்படிக்கு
JP

என்னவளே

உண்மை உரைத்தாய்
உணர்வோடு பழகினாய்
உடலோடு இணைந்தாய்
மூச்சாக நகர்கிறாய்
உயிரோடு கலந்தாய்
என்னுள் ஐக்கியம் ஆனாய்.


இப்படிக்கு,
உன்னிடம் என்னை இழந்த
நான்.

Friday, January 22, 2010

அருணாச்சல பிரதேசம் Vs காங்கிரஸ்


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்துக்கு சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது.

அருணாசல பிரதேசத்தில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு (
வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் & மண் அரிப்பைத் தடுக்கும் திட்டத்திற்கு ) ஆசிய வளர்ச்சி வங்கி அளிக்க இருந்த கடன் உதவியை சீனா தலையிட்டு தடுத்து நிறுத்தி உள்ளது.

கடந்த மாதம் , பிரதமர் மன்மோகன்சிங் அங்கு சென்றிருந்தபோது அருணாசல பிரதேசம் சூரியன் உதிக்கும் நமது நிலப்பரப்பு என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சீனவின் தூதர் சுன் யூக்சி, அருணாசல பிரதேசம் முழுவதும் சீனாவுக்கு சொந்தமான பகுதி என்று கூறியிருந்தார். அருணாசல பிரதேசம் முழுவதையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என அவர் கூறியிருந்தார்.

see india map in GoogleMap. கூகிள் டிரிபிள் கேம் விளையாடுகிறது.

http://ditu.google.cn/ - சீனாவின் ஒரு பகுதி அருணாசல் பிரதேசம்

http://maps.google.co.in/ - இந்தியாவின் ஒரு பகுதி அருணாசல பிரதேசம்.

http://maps.google.com/ - சர்ச்சைக்கு உட்பட்ட இடம் அருணாசல பிரதேசம்
(காஷ்மீர் போல இதையும் புள்ளிக்கோடுகளால் காட்டி உள்ளனர்.

புத்த மதத்தலைவர் தலாய்லாமா அருணாசல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து சின பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட கட்டுரையில் 'அருணாசல பிரதேசத்தில் தலாய்லாமாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது சீனாவை அதிருப்தி அடையச்செய்துள்ளது. போருக்கு அழைக்கும் நோக்கத்தோடு இந்தியா இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறதோ என்று சீனா சந்தேகமடைகிறது. 1962ஆம்ஆண்டு சீனாவுடன் இந்தியா போரிட்டு தோல்வியடைந்ததை பாடமாக இந்திய எடுத்துக்கொள்ள வேண்டும்."என்று கட்டுரை வெளியிட்டிருந்தது.

''அருணாசல பிரதேசத்தில் இருநாடுகளுக்கும் இடையில் பிரசனை நீடிக்கும் போது தலாய்லாமாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய அனுமதி அளித்தது கண்டிக்கத்தக்கது"என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜின் காங் தெரிவித்திருந்தார்.


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேயர் வரையறை செய்த `இந்தியா-சீனா எல்லை'யை சீனா ஏற்க மறுத்து வருகிறது.

இந்தியாவின் எல்லையோர பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததை தொடர்ந்து, கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே போர் நடந்தது. அதன் பிறகு, எல்லை பிரச்சினை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே 13 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும், எல்லை பிரச்சினைக்கு இதுவரை சுமூக தீர்வு காணப்படவில்லை.

அதே நேரத்தில், காஷ்மீர் மாநிலத்தில் 43 ஆயிரத்து 180 சதுர கி.மீ. பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டது. இது குறித்து இந்தியா பிரச்சினை எழுப்பினால், "இந்தியாதான் சீனாவுக்கு சொந்தமான 90 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை ஆக்கிரமித்து விட்டது'' என சீனா அடாவடியாக பதில் கூறி வருகிறது.
சீனா உரிமை கோரும் பெரும்பாலான பகுதிகள், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ளன. இது தவிர, சிக்கிம் உள்ளிட்ட சில எல்லையோர மாநிலங்களிலும் சீனா மூக்கை நுழைத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த 3-ந் தேதி அன்று பிரதமர் மன்மோகன்சிங் அருணாசல பிரதேசத்துக்கு சென்றார். அதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மன்மோகன்சிங் பெயரை குறிப்பிடாமல், இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மாஜாவுக்சு அறிக்கை வெளியிட்டார். வெளியுறவு இணைய தளத்தில் அந்த அறிக்கை நேற்று வெளியானது.

அதில், "இந்திய - சீன எல்லை, இன்னமும் அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை. எனவே, சீனாவின் தீவிரமான கவலையை பொருட்படுத்தாமல் பிரச்சினைக்குரிய பகுதிக்கு (அருணாசல பிரதேசம்) இந்திய தலைவர் (மன்மோகன்சிங்) பயணம் மேற்கொண்டதால் சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இந்தியா - சீனா உறவில் மேம்பாடு ஏற்பட வேண்டுமானால் சீனாவின் கவலையை இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டும் என்று சீனா கேட்டுக்கொள்கிறது'' என கூறப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது வெட்க கேடானது.

அண்மையில் நடந்த அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில் 70 சதவீத மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அருணாசல பிரதேசத்தை சீனா எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?''

ஆளும் காங்கிரஸ் கடந்த 60 வருட ஆட்சியில், வெளியுறவு கொள்கையில் உறுதியாக இல்லாமல் , மற்ற நாட்டினரின் இழுப்புக்கு எல்லாம் ஆடியுள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகிறது ?????